புத்தாண்டில் அரச ஊழியர்கள் தமது பணிகளை ஆரம்பித்து உறுதிமொழி மேற்கொள்ளும் வைபவம் ஜனாதிபதியின் தலைமையில் முற்பகல் 9.00 மணியளவில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைவாக அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் இன்று (02) காலை 9.00 மணிக்கு உறுதிமொழி செய்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி, முழு அரசாங்கமும் ஒரே பொறிமுறையாகச் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.