சியம்பலாண்டுவ - மொனராகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகிழுந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
சூரியவெவ காவற்துறையில் பணியாற்றும் 29 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் திருமண நிகழ்வுக்காக 4 பேருடன் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.