வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் இரதோற்சவம் இன்றையதினம்(06) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
மாயவன், ஸ்ரீதேவி,பூமாதேவி ஆகியோர்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றுஇ மேளவாத்தியங்கள் சகிதம் தேரேறி உலா வந்து கிருஷ்ண பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த உற்சவத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ப்தர்கள் வருகை தந்து தூக்குக் காவடி எடுத்தும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக்கொண்டனர்.
இவ் ஆலயத்தின் பிரம்மோற்சவம் கடந்த 22ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், நாளை மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.