மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவான இப்ராகிம் முஹமது ஷோலியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் மாலைத்தீவு நோக்கி சென்றுள்ளார்.
மாலைத்தீவில் அண்மையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் மாலைத்தீவின் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முஹமது ஷோலி வெற்றிபெற்றிருந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் இருந்து நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட மாலைத்தீவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மிகவும் கவனிக்கப்பட்டது.
மாலைத்தீவில் முன்னேற்றக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முஹமது ஷோலியிடம் தோல்வியடைந்தார்.
இதனால், இப்ராகிம் முஹமது ஷோலி மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவானதுடன் நாளை நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அவர் பதவியேற்கவுள்ளார்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அவர் சற்றுமுன்னர் மாலைத்தீவு நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்கு பயணம் samugammedia மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவான இப்ராகிம் முஹமது ஷோலியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் மாலைத்தீவு நோக்கி சென்றுள்ளார்.மாலைத்தீவில் அண்மையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் மாலைத்தீவின் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முஹமது ஷோலி வெற்றிபெற்றிருந்தார்.சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் இருந்து நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட மாலைத்தீவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மிகவும் கவனிக்கப்பட்டது.மாலைத்தீவில் முன்னேற்றக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முஹமது ஷோலியிடம் தோல்வியடைந்தார்.இதனால், இப்ராகிம் முஹமது ஷோலி மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவானதுடன் நாளை நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அவர் பதவியேற்கவுள்ளார்.இந்நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அவர் சற்றுமுன்னர் மாலைத்தீவு நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.