பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
போக்குவரத்து கொடுப்பனவை அதிகரித்தல் , ஏனைய சலுகைகளை வழங்குதல் , மேற்பார்வை பொச்சுகாதார பரிசோதகர்களுக்கான பரீட்சையை நடாத்துதல், உதவி பிராந்திய வைத்திய அதிகாரிகள் தங்களுக்கு கட்டளை வழங்குவதை தடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பூநகரி, கண்டாவளை, பளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளின் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் பரிசோதகர்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.