• May 18 2024

தேர்தல் நடைபெற்றால் ரணில் ராஜபக்சாக்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருப்பார்கள் - ஜேவிபி! SamugamMedia

JVP
Sharmi / Feb 16th 2023, 11:52 am
image

Advertisement

இலங்கையில் மீண்டுமொரு இனக்கலவரம் அல்லது மத கலவரத்தை தூண்டி நாட்டை கலவரமான நிலைக்கு கொண்டு வந்தது ரணில் விக்கிரமசிங்கவே என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தின் இதயமாக இருந்த யாழ்.நூலகத்தினை ஜக்கியதேசிய கட்சியே எரித்து சாம்பல் ஆக்கியிருந்தாகவும் அதேபோன்று நாட்டை கலவர பூமியாக்க நாட்டின் இருப்பை கேள்வி குறிகாக்கும் நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுவருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்திற்கு உதவி செய்ய முடியாதென சர்வதேச நாணயநிதியம் உட்பட பல சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளதாகவும் எனவே மக்களின் ஆணையை மீண்டும் பெறுமாறு வலியுறுத்தியுள்ளதாக இராமலிங்கம் சந்திரசேகரம் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு புதிய மக்கள் ஆணை கிடைக்கின்ற பட்சத்தில் ரணில் ராஜபக்சாக்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்றும் இராமலிங்கம் சந்திரசேகரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் நடைபெற்றால் ரணில் ராஜபக்சாக்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருப்பார்கள் - ஜேவிபி SamugamMedia இலங்கையில் மீண்டுமொரு இனக்கலவரம் அல்லது மத கலவரத்தை தூண்டி நாட்டை கலவரமான நிலைக்கு கொண்டு வந்தது ரணில் விக்கிரமசிங்கவே என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.யாழ்ப்பாணத்தின் இதயமாக இருந்த யாழ்.நூலகத்தினை ஜக்கியதேசிய கட்சியே எரித்து சாம்பல் ஆக்கியிருந்தாகவும் அதேபோன்று நாட்டை கலவர பூமியாக்க நாட்டின் இருப்பை கேள்வி குறிகாக்கும் நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுவருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்திற்கு உதவி செய்ய முடியாதென சர்வதேச நாணயநிதியம் உட்பட பல சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளதாகவும் எனவே மக்களின் ஆணையை மீண்டும் பெறுமாறு வலியுறுத்தியுள்ளதாக இராமலிங்கம் சந்திரசேகரம் குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறு புதிய மக்கள் ஆணை கிடைக்கின்ற பட்சத்தில் ரணில் ராஜபக்சாக்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்றும் இராமலிங்கம் சந்திரசேகரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement