• Sep 08 2024

பசிலிடம் கோரிய ரணில் - தற்போது அதை ஏன் மறைக்கின்றார் - சஜித் கேள்வி SamugamMedia

Chithra / Mar 16th 2023, 11:34 am
image

Advertisement

"சட்டமன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை ஆகியவை இணைந்து செயற்பட்டாலும், நாட்டில் தற்போது சர்வாதிகார நிறைவேற்று அதிகாரமே ஆட்சி முறையில் உள்ளது. அதன் மூலம் உயர்நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதித்து மிதிக்கும் நிலைக்கு நாட்டு ஆட்சியாளர்கள் வந்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட சவாலுக்குட்படுத்துவதன் மூலம் அரசமைப்பின் மூலம் வழங்கப்பட்ட மக்களின் வாக்குரிமைக்குக் கூட சவால் விடுக்கப்படுகின்றது."- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மஹர பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த போது, சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் - வாங்கல்கள் மற்றும் உடன்படிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அப்போது நிதி அமைச்சராக இருந்த பஸில் ராஜபக்சவிடம் கோரினார். தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் கூட சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மறைத்து வருகின்றார். தனது பதவிகள் மாறியதும் தீர்மானங்களிலும் அவர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஒரு நாடு என்ற வகையில் நாம் ஒரு திருப்புமுனையை எதிர்கொண்டுள்ளோம் என்றாலும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான யானை - காக்கை - மொட்டு அரசு இதற்கு இடமளிப்பதாக இல்லை. இந்தத் திருப்புமுனையை அரசு எதிர்கொண்டால் அவர்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாது போகும்.

மக்கள் விரோத, மக்கள் எதிர்ப்பு, ஒடுக்குமுறைசார் இந்த அரசு, வரி விதித்து, பொருட்களின் விலையை உயர்த்தி மக்களின் கையில் இருக்கும் கடைசி விலங்கைக் கூட பறித்து, பொருளாதாரத்தைச் சுருக்கி வருவதையே செயற்படுத்தி வருகின்றது. பொருளாதாரத்தை விருத்தி செய்து, மக்களின் கைகளில் பணம் செல்வதற்கான வழிகளை உருவாக்குவதும்தான் நடக்க வேண்டிய செயற்பாடு.

கேள்வியைக் குறைப்பதற்காக இந்த வரிச் சுழற்சியை அரசு செயற்படுத்தி வருகின்றது. இதனால் பணவீக்கம் குறைவடைந்து நாடு இயல்பு நிலைக்கு மீளும் என நினைத்தாலும் அது உண்மையில் தவறான செயல்.

நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்தாலும் அது ராஜபக்ச குடும்பத்துக்கோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களுக்கோ அது பிரச்சினையாக அமையாது. 220 இலட்சம் மக்களுக்குமே அது பிரச்சினையாக அமைகின்றது.

நாட்டில் அரசால் செய்ய முடியாத பல விடயங்களை கடந்த 3 ஆண்டுகளில், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி சாதித்துள்ளது. வெறும் பேச்சுக்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காமல், செயற்படுவதுதான் ஐக்கிய மக்கள் சக்தியின் இயல்பு.

எனவே, மீண்டும் ஏமாறுவதை விட்டுவிட்டு உண்மையான பதிலைத் தேடும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கின்றேன்" - என்றார்.


பசிலிடம் கோரிய ரணில் - தற்போது அதை ஏன் மறைக்கின்றார் - சஜித் கேள்வி SamugamMedia "சட்டமன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை ஆகியவை இணைந்து செயற்பட்டாலும், நாட்டில் தற்போது சர்வாதிகார நிறைவேற்று அதிகாரமே ஆட்சி முறையில் உள்ளது. அதன் மூலம் உயர்நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதித்து மிதிக்கும் நிலைக்கு நாட்டு ஆட்சியாளர்கள் வந்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட சவாலுக்குட்படுத்துவதன் மூலம் அரசமைப்பின் மூலம் வழங்கப்பட்ட மக்களின் வாக்குரிமைக்குக் கூட சவால் விடுக்கப்படுகின்றது."- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.மஹர பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-"தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த போது, சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் - வாங்கல்கள் மற்றும் உடன்படிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அப்போது நிதி அமைச்சராக இருந்த பஸில் ராஜபக்சவிடம் கோரினார். தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் கூட சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மறைத்து வருகின்றார். தனது பதவிகள் மாறியதும் தீர்மானங்களிலும் அவர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.ஒரு நாடு என்ற வகையில் நாம் ஒரு திருப்புமுனையை எதிர்கொண்டுள்ளோம் என்றாலும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான யானை - காக்கை - மொட்டு அரசு இதற்கு இடமளிப்பதாக இல்லை. இந்தத் திருப்புமுனையை அரசு எதிர்கொண்டால் அவர்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாது போகும்.மக்கள் விரோத, மக்கள் எதிர்ப்பு, ஒடுக்குமுறைசார் இந்த அரசு, வரி விதித்து, பொருட்களின் விலையை உயர்த்தி மக்களின் கையில் இருக்கும் கடைசி விலங்கைக் கூட பறித்து, பொருளாதாரத்தைச் சுருக்கி வருவதையே செயற்படுத்தி வருகின்றது. பொருளாதாரத்தை விருத்தி செய்து, மக்களின் கைகளில் பணம் செல்வதற்கான வழிகளை உருவாக்குவதும்தான் நடக்க வேண்டிய செயற்பாடு.கேள்வியைக் குறைப்பதற்காக இந்த வரிச் சுழற்சியை அரசு செயற்படுத்தி வருகின்றது. இதனால் பணவீக்கம் குறைவடைந்து நாடு இயல்பு நிலைக்கு மீளும் என நினைத்தாலும் அது உண்மையில் தவறான செயல்.நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்தாலும் அது ராஜபக்ச குடும்பத்துக்கோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களுக்கோ அது பிரச்சினையாக அமையாது. 220 இலட்சம் மக்களுக்குமே அது பிரச்சினையாக அமைகின்றது.நாட்டில் அரசால் செய்ய முடியாத பல விடயங்களை கடந்த 3 ஆண்டுகளில், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி சாதித்துள்ளது. வெறும் பேச்சுக்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காமல், செயற்படுவதுதான் ஐக்கிய மக்கள் சக்தியின் இயல்பு.எனவே, மீண்டும் ஏமாறுவதை விட்டுவிட்டு உண்மையான பதிலைத் தேடும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கின்றேன்" - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement