பாலியல் வல்லுறவு வழக்குகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பேரிற்கு இன்றைய தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச் சம்பவம் ஈரானில் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில், குறித்த சந்தேக நபர்கள் போலியான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிலையத்தை நடாத்தியுள்ளதுடன் அங்கு பெண்களை வரச்செய்து பின்னர் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மருத்துவ உதவியாளரான ஒருவர், போலி விளம்பரங்கள் மூலம் 7 பெண்களை தமது போலி சிகிச்சை நிலையத்துக்கு வரவழைத்துள்ளார்.
பின்னர், அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன், தாதிகளான மற்றைய இரு ஆண்களிற்கு எதிராகவும் பாலியல் வல்லுறவு, மருந்து திருட்டு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில்,3 ஆண்ககளிற்கும் 12 வழக்குகளில் குற்றவாளிகள் என 2021 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவாளிகளிற்கு இன்றைய தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
பாலியல் வல்லுறவு - மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம். முக்கிய நாட்டில் அதிரடி. samugammedia பாலியல் வல்லுறவு வழக்குகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பேரிற்கு இன்றைய தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.இச் சம்பவம் ஈரானில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில், குறித்த சந்தேக நபர்கள் போலியான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிலையத்தை நடாத்தியுள்ளதுடன் அங்கு பெண்களை வரச்செய்து பின்னர் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மருத்துவ உதவியாளரான ஒருவர், போலி விளம்பரங்கள் மூலம் 7 பெண்களை தமது போலி சிகிச்சை நிலையத்துக்கு வரவழைத்துள்ளார். பின்னர், அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், தாதிகளான மற்றைய இரு ஆண்களிற்கு எதிராகவும் பாலியல் வல்லுறவு, மருந்து திருட்டு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்,3 ஆண்ககளிற்கும் 12 வழக்குகளில் குற்றவாளிகள் என 2021 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளிற்கு இன்றைய தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது