றைட் 4 சிலோன் சைக்கிள் சவாரி யாழ். மானிப்பாய் கிறீன் மருத்துவதனையில் இன்று மதியம் நிறைவுபெற்றது.
இந்த பயணம் கடந்த 1ம் திகதி மட்டக்களப்பு அறுகம் குடாவில் ஆரம்பித்து, அடுத்த நாள் திருகோணமலையை சென்றடைந்து, 3ம் திகதி முல்லைத்தீவினை வந்தடைந்து, இன்றையதினம் யாழ்ப்பாணம் - கிறீன் மருத்துவமனையை வந்தடைந்தது.
மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையினை தரமுயர்த்தும் நோக்குடன் றைட் 4 சிலோன் சைக்கிள் சவாரி கடந்த ஒன்பது ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது.
இவ்வாறு யாழ்ப்பாணத்தினை வந்தடைந்த சவாரியில் பங்குபற்றுனர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்தவகையில் இச்சவாரியினை வெற்றிகரமாக நிறைவுசெய்தவர்களிற்கு மருத்துவமனை ஊழியர்களால் பதங்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.