இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற தேங்காய் எண்ணையின் வர்த்தக நாமத்தை போன்று போலியாக தயார் செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட நச்சுத்தன்மை கொண்ட தேங்காய் எண்ணை விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்று குருநாகலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் கெக்கிராவையில் காணப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த தேங்காய் எண்ணெய் துறைமுகத்தை விட்டு வெளியேறிய விதம் பிரச்சினைக்குரியது என்றும் புத்திக டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.