வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஆளுநர் செயலக
வழிகாட்டலில் உள்ளூர் உற்பத்திகளின் விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் (28)
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இதன்போது வடக்கின் 5 மாவட்டங்களில் உள்ள சிறு முயற்சியாளர்களின் உற்பத்திகள் விற்பனை மற்றும் கண்காட்சி என்பன இடம்பெற்றிருந்தன.
இதன்போது ஆடைகள், பனை தென்னை உற்பத்தி பொருட்கள், மட்பாண்ட உற்பத்திப் பொருட்கள், கடல்சார் உற்பத்திகள்,
தோல் உற்பத்திகள் உள்ளிட்ட பல உற்பத்தி பொருட்கள் விற்பனை
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கொள்வனவாளர்கள் பலர் ஆர்வத்துடன் இதில் கலந்துகொண்டு பொருட்களை வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிகின்றது.