சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் வவுனியா - நெடுங்கேணி, ஒலுமடு பிரதேசத்தில் அமைந்துள்ள வெடுக்கு நாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் பொங்கல் வழிபாட்டை மேற்கொண்டார்.
இந் நிகழ்வானது நேற்று ( சனிக்கிழமை) காலை 10.30 மணி தொடக்கம் 2.30 மணி வரை இடம்பெற்றதுடன் பல பக்த அடியார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.