• May 19 2024

மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடும் முதலையால் அச்சம்..! நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்...! samugammedia

Chithra / Oct 9th 2023, 11:34 am
image

Advertisement

 

அம்பலாங்கொடை, மாதம்பை ஆற்றில் அண்மைய நாட்களாக  முதலை நடமாடுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதலை தற்போது அம்பலாங்கொடை உரவத்த கங்காராம விகாரைக்கு பின்னால் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சுமார் 10 அடி நீளம் கொண்ட இந்த முதலையை உரிய அதிகாரிகள் அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வனவிலங்கு திணைக்களத்துக்கும் தெரியப்படுத்திய போதும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலையின் நடமாட்டம் காரணமாக ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் அச்சமடைந்துள்ளதுடன் மீன்பிடி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கிராம மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடும் முதலையால் அச்சம். நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள். samugammedia  அம்பலாங்கொடை, மாதம்பை ஆற்றில் அண்மைய நாட்களாக  முதலை நடமாடுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த முதலை தற்போது அம்பலாங்கொடை உரவத்த கங்காராம விகாரைக்கு பின்னால் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.சுமார் 10 அடி நீளம் கொண்ட இந்த முதலையை உரிய அதிகாரிகள் அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து வனவிலங்கு திணைக்களத்துக்கும் தெரியப்படுத்திய போதும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.முதலையின் நடமாட்டம் காரணமாக ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் அச்சமடைந்துள்ளதுடன் மீன்பிடி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கிராம மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement