சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) வருடாந்த மாநாடு இன்று மொரோக்கோவின் மராகேச்சில் ஆரம்பமாகின்றது.
இன்று ஆரம்பமாகும் குறித்த மாநாடு எதிர்வரும் எதிர்வரும் 15ம் திகதி நிறைவடையவுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) மாநாட்டின் ஊடாக உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையை இலங்கை மேலும் வெளிப்படுத்தலாம் என ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.