கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு இன்று கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து முதிரை மரக்குத்திகளை ஏற்றி பயணித்த கப் ரக வாகனம் நெத்தலியாற்று பகுதியில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கப் ரக வாகனம் மற்றும் வாகன சாரதி உதவியாளர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இன்று நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூன்று பேரும் இன்றைய தினம்(11) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
கிடைத்த இரகசிய தகவல்.களத்தில் இறங்கிய பொலிஸார். சிக்கிய பொருட்கள்.samugammedia கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு இன்று கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து முதிரை மரக்குத்திகளை ஏற்றி பயணித்த கப் ரக வாகனம் நெத்தலியாற்று பகுதியில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் கப் ரக வாகனம் மற்றும் வாகன சாரதி உதவியாளர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் இன்று நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூன்று பேரும் இன்றைய தினம்(11) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.