• May 18 2024

கிடைத்த ரகசிய தகவல்...! களத்தில் இறங்கிய பொலிஸாருக்கு அதிர்ச்சி...! முக்கிய பொருள் மீட்பு...!samugammedia

Sharmi / Oct 7th 2023, 11:28 am
image

Advertisement

திருமலை -புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத வெடிபொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று(07) இடம்பெற்றுள்ளது.

புல்மோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி விஜயகோனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் 09 டெடனேட்டர் மற்றும் 09 சேவா நூல் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புல்மோட்டை ஜின்னாபுரம் பகுதியைச் சேர்ந்த கே.எம்.சாதிக்(28வயது) எனவும் தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த ரகசிய தகவல். களத்தில் இறங்கிய பொலிஸாருக்கு அதிர்ச்சி. முக்கிய பொருள் மீட்பு.samugammedia திருமலை -புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத வெடிபொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று(07) இடம்பெற்றுள்ளது.புல்மோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி விஜயகோனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் 09 டெடனேட்டர் மற்றும் 09 சேவா நூல் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புல்மோட்டை ஜின்னாபுரம் பகுதியைச் சேர்ந்த கே.எம்.சாதிக்(28வயது) எனவும் தெரியவருகிறது.கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement