எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய நடிகர் மாரிமுத்து (56) மாரடைப்பால் காலமானார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து.
அத்தோடு கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார்.
குறிப்பாக, எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பம் முதலே வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதன் டப்பிங்கிற்காக இன்று காலை டப்பிங் ஸ்டூடியோ வந்த மாரிமுத்துவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரை அருகில் உள்ள சூர்யா என்கிற தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்நிலையில் அவரது மறைவை அறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரின் இறுதிச்சடங்கு தேனியில் உள்ள அவரது சொந்த ஊரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய நடிகர் மாரிமுத்து காலமானார். அதிர்ச்சியில் ரசிகர்கள். எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய நடிகர் மாரிமுத்து (56) மாரடைப்பால் காலமானார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து.அத்தோடு கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். குறிப்பாக, எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பம் முதலே வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதன் டப்பிங்கிற்காக இன்று காலை டப்பிங் ஸ்டூடியோ வந்த மாரிமுத்துவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை அருகில் உள்ள சூர்யா என்கிற தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.இந்நிலையில் அவரது மறைவை அறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு தேனியில் உள்ள அவரது சொந்த ஊரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.