• May 19 2024

பல்துறைக் கலைஞனை இழந்தது சமூகம்..!!

Tamil nila / Apr 3rd 2024, 10:00 pm
image

Advertisement

சமூகம் மீடியாவின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும்  பணியாற்றிய நடேசு ஜெயவானுஜன் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி அறிவியல் நகரைப் பிறப்பிடமாகவும்,  யாழ்ப்பாணம் இருபாலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இவர்  சமூகம் மீடியாவில் பல்திறன் கொண்ட கலைஞனாக வலம் வந்தவர். 

செய்தி வாசிப்பாளர்,நிகழ்ச்சி தொகுப்பாளர்,வானொலி அறிப்பாளர்,நிகழ்ச்சித்  தயாரிப்பாளர்,செய்தி உதவி ஆசிரியர் என பல பரிமாணத்தில் தனது தனித்திறமையை காட்டி சமூகம் மீடியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். 

அத்துடன் கவிஞர், பாடகராகவும் அவர் தனது திறமையை வெளிக்காட்டி அதில் வெற்றியும் கண்டுள்ளார். 

உடல்நிலை பாதிப்பால் சிறிது காலம் ஓய்விலிருந்த போதும் ஊடகத்துறையில் அவர் கொண்ட ஆர்வத்தால், இறுதிவரை இப் பணியை ஆற்றியிருந்தார். 

குறித்த கலைஞனின் இழப்பு  சமூகம் மீடியா  குழுமத்தினரை பெரும் துயருக்குள் ஆழ்த்தியுள்ளது.

பல்துறைக் கலைஞனை இழந்தது சமூகம். சமூகம் மீடியாவின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும்  பணியாற்றிய நடேசு ஜெயவானுஜன் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகரைப் பிறப்பிடமாகவும்,  யாழ்ப்பாணம் இருபாலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இவர்  சமூகம் மீடியாவில் பல்திறன் கொண்ட கலைஞனாக வலம் வந்தவர். செய்தி வாசிப்பாளர்,நிகழ்ச்சி தொகுப்பாளர்,வானொலி அறிப்பாளர்,நிகழ்ச்சித்  தயாரிப்பாளர்,செய்தி உதவி ஆசிரியர் என பல பரிமாணத்தில் தனது தனித்திறமையை காட்டி சமூகம் மீடியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். அத்துடன் கவிஞர், பாடகராகவும் அவர் தனது திறமையை வெளிக்காட்டி அதில் வெற்றியும் கண்டுள்ளார். உடல்நிலை பாதிப்பால் சிறிது காலம் ஓய்விலிருந்த போதும் ஊடகத்துறையில் அவர் கொண்ட ஆர்வத்தால், இறுதிவரை இப் பணியை ஆற்றியிருந்தார். குறித்த கலைஞனின் இழப்பு  சமூகம் மீடியா  குழுமத்தினரை பெரும் துயருக்குள் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement