நெருக்கடி.காலத்தில் அடக்குமுறை சட்டங்கள் , பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் ஊழிய சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்று(5) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.
இவ் விடயங்கள் தொடர்பாக சட்டத்தரணியும் வர்த்தக மற்றும் வணிக தொழிளாளர் சங்க தலைவருமான சுவஸ்திகா அருள்லிங்கம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளன தலைவருமான அகிலன் கதிர்காமர் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
இவர்களின் உரைகளைத் தொடர்ந்து இவ் விடயம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பல்கலைக்கழகம் சார்ந்தோர் , தொழிற்சங்கம் சார்ந்தோர் எனப் பலர் கலந்துகொண்டனர்.