யாழ் மணிக் கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும் கலந்துரையாடல் யாழிலுள்ள தனியார் விடுதியில் இன்று இடம் பெற்றது.
நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ் மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது.
கடந்த 30 ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர் வலம் யாழ் ஆரோக்கிய பவனி இடம்பெற்றது.
யாழ் மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம் விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது .
குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன் மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
யாழ் மணிக் கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்க விஷேட கலந்துரையாடல். யாழ் மணிக் கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும் கலந்துரையாடல் யாழிலுள்ள தனியார் விடுதியில் இன்று இடம் பெற்றது.நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ் மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது.கடந்த 30 ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர் வலம் யாழ் ஆரோக்கிய பவனி இடம்பெற்றது.யாழ் மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம் விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது .குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன் மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.