• May 18 2024

வகுப்பறையின் கூரையில் இருந்த மின்விசிறியில் மோதுண்டு மாணவன் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Oct 5th 2023, 6:51 am
image

Advertisement

புஸ்ஸல்லாவை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், வகுப்பறையின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதுண்டு, பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த பாடசாலை மைதானத்தில் நேற்றைய  தினம் சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் போது, குறித்த மாணவன் நேற்று  பிற்பகல் வகுப்பறைக்கு சென்று, சக மாணவர்களுடன் மேசை மீது ஏறி விளையாடியபோது, இயங்கிக்கொண்டிருந்த மின்விசிறியில் மோதுண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

இதனையடுத்து, காயமடைந்த அவர் புஸ்ஸல்லாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் கிலென்லொக் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வகுப்பறையின் கூரையில் இருந்த மின்விசிறியில் மோதுண்டு மாணவன் உயிரிழப்பு samugammedia புஸ்ஸல்லாவை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், வகுப்பறையின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதுண்டு, பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.குறித்த பாடசாலை மைதானத்தில் நேற்றைய  தினம் சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.இதன் போது, குறித்த மாணவன் நேற்று  பிற்பகல் வகுப்பறைக்கு சென்று, சக மாணவர்களுடன் மேசை மீது ஏறி விளையாடியபோது, இயங்கிக்கொண்டிருந்த மின்விசிறியில் மோதுண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.இதனையடுத்து, காயமடைந்த அவர் புஸ்ஸல்லாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிரிழந்தவர் கிலென்லொக் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement