தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் மாணவர் நாடாளுமன்ற அமர்வு நேற்று(15) நண்பகல் 12.00 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தி்ல் இடம்பெற்றது.
இவ் அமர்விற்கு பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலய சமூக விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ல.கி.விக்ரர் ஜெயக்குமாரும் , சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலய சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் செ.பாஸ்கரனும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.