• May 18 2024

யாழில் பதற்றம் - பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் மீது துப்பாக்கிச் சூடு! samugammedia

Chithra / Oct 9th 2023, 1:44 pm
image

Advertisement

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நாற்பதுக்கு மேற்பட்ட குற்றச் செயல்களுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மீது துப்பக்கிசூடு நடாத்தி பொலிஸார் கைது செய்துள்ளனர். 

நேற்றிரவு தொடக்கம் மிக தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்றையதினம் குறித்த சந்தேக நபரது வீட்டினை  பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலமை பொலிஸ் பரிசேதகர் தலமையிலான பொலிஸார்  சுற்றிவளைக்கப்பட்டவேளை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேகநரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது, அவர் பருத்தித்திறை பொலிஸ் நிலைய குற்றத்ததடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியை கத்தியால் குத்துவதற்கு முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் குறித்த சந்தேகநபரின் காலுக்கு கீழாக துப்பாக்கி சூடு நடாத்தி கைது செய்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சந்தேக நபர் உடனடியாக பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டி வருவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் பதற்றம் - பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் மீது துப்பாக்கிச் சூடு samugammedia பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நாற்பதுக்கு மேற்பட்ட குற்றச் செயல்களுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மீது துப்பக்கிசூடு நடாத்தி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு தொடக்கம் மிக தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்றையதினம் குறித்த சந்தேக நபரது வீட்டினை  பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலமை பொலிஸ் பரிசேதகர் தலமையிலான பொலிஸார்  சுற்றிவளைக்கப்பட்டவேளை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த சந்தேகநரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது, அவர் பருத்தித்திறை பொலிஸ் நிலைய குற்றத்ததடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியை கத்தியால் குத்துவதற்கு முற்பட்டுள்ளார்.இந்நிலையில் பொலிசார் குறித்த சந்தேகநபரின் காலுக்கு கீழாக துப்பாக்கி சூடு நடாத்தி கைது செய்துள்ளனர்.இதையடுத்து குறித்த சந்தேக நபர் உடனடியாக பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டி வருவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement