• May 18 2024

யாழில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த குடும்பஸ்தர்; 6 பேர் கைது! – பலரை தேடும் பொலிசார் samugammedia

Chithra / Aug 8th 2023, 7:30 am
image

Advertisement

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த 55 வயது குடும்பஸ்தர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி  உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை கைது செய்ய பொலிசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

55 வயது குடும்பஸ்தருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு கூறினர்.

இருவரும் (07) ஊருக்கு வந்தவேளை மக்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நபரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சுன்னாகம் பொலிஸார் அனுப்பி வைத்தவேளை, அவரது உயிரிழந்தார்.

சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெகதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.


யாழில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த குடும்பஸ்தர்; 6 பேர் கைது – பலரை தேடும் பொலிசார் samugammedia யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த 55 வயது குடும்பஸ்தர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி  உயிரிழந்தார்.குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை கைது செய்ய பொலிசார் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,55 வயது குடும்பஸ்தருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றிருந்தனர்.இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு கூறினர்.இருவரும் (07) ஊருக்கு வந்தவேளை மக்களால் தாக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நபரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சுன்னாகம் பொலிஸார் அனுப்பி வைத்தவேளை, அவரது உயிரிழந்தார்.சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெகதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்த விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement