அரசாங்கம் மக்களை மேலும் துன்பப்படுத்தும் நோக்கில் அறிவற்றவகையில் செயற்பட்டு வருவதாக கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.நசுருதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மின்சாரக் கட்டணத்தையும் இரண்டாவது தடவையாகவும் மோட்டுத் தனமாக அதிகரித்து மக்களை நாசமாக்க நினைக்கும் அரசின் நடவடிக்கையை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மீடியா போர ஊடக இல்லத்தில் இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் பல பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதாகவும் எனவே மீண்டும் அவர்களின் வாழ்க்கை சுமையை அதிகரிக்காமல் உடனடியாக மின்சாரக் கட்டண அதிகரிப்பு தீர்மானத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாளாந்த ஜீவனோபாயத்துக்காக மக்கள் எவ்வளவோ சவால்களை சந்திக்கின்றனர்
இந்த நிலைமில் மின்சார கட்டணம் நீர்க் கட்டணம் போன்றவற்றை அதிகரிப்பதை கைவிட்டு
இலகுவாக வாழக் கூடியதும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வாழவும் வழி சமைத்துக் கொடுப்பது அரசின் தார்மீகப் பொறுப்பாகும் என்றும் கிண்ணியா நகர சபை உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசின் மோட்டுத்தனமான தீர்மானம் - அவலப்படும் மக்கள் நசுருதீன் சாடல் அரசாங்கம் மக்களை மேலும் துன்பப்படுத்தும் நோக்கில் அறிவற்றவகையில் செயற்பட்டு வருவதாக கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.நசுருதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.மின்சாரக் கட்டணத்தையும் இரண்டாவது தடவையாகவும் மோட்டுத் தனமாக அதிகரித்து மக்களை நாசமாக்க நினைக்கும் அரசின் நடவடிக்கையை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.திருகோணமலை மீடியா போர ஊடக இல்லத்தில் இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மக்கள் பல பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதாகவும் எனவே மீண்டும் அவர்களின் வாழ்க்கை சுமையை அதிகரிக்காமல் உடனடியாக மின்சாரக் கட்டண அதிகரிப்பு தீர்மானத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.நாளாந்த ஜீவனோபாயத்துக்காக மக்கள் எவ்வளவோ சவால்களை சந்திக்கின்றனர்இந்த நிலைமில் மின்சார கட்டணம் நீர்க் கட்டணம் போன்றவற்றை அதிகரிப்பதை கைவிட்டுஇலகுவாக வாழக் கூடியதும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வாழவும் வழி சமைத்துக் கொடுப்பது அரசின் தார்மீகப் பொறுப்பாகும் என்றும் கிண்ணியா நகர சபை உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.