உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகளை திருத்துவது தொடர்பான அறிக்கை இன்றையதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன.
இதனால் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை அரசாங்கம் இந்த தேர்தலை தாமதப்படுத்துவதற்காகவே இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியல்லவும் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.