• May 19 2024

மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் செய்த செயல்! samugammedia

Tamil nila / Sep 28th 2023, 7:59 am
image

Advertisement

பிரான்ஸில் நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரால் 51 வயதுடைய பெண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Toulouse நகரில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. உள்ளூர் பொலிஸ்நிலையம் ஒன்றுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாகவும், விரைந்து வருமாறும் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.

அங்குள்ள வீடொன்றில், இரத்த வெள்ளத்தில் 51 வயதுடைய பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். தலையில் தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டதாகவும், தாக்குதல் நடத்திய அவரது 54 வயதுடைய கணவர் சடலத்துக்கு அருகே அமர்ந்திருந்ததாகவும், அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் செய்த செயல் samugammedia பிரான்ஸில் நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தியுள்ளார்.இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரால் 51 வயதுடைய பெண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.Toulouse நகரில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. உள்ளூர் பொலிஸ்நிலையம் ஒன்றுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாகவும், விரைந்து வருமாறும் தெரிவித்துள்ளார்.அதையடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.அங்குள்ள வீடொன்றில், இரத்த வெள்ளத்தில் 51 வயதுடைய பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். தலையில் தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டதாகவும், தாக்குதல் நடத்திய அவரது 54 வயதுடைய கணவர் சடலத்துக்கு அருகே அமர்ந்திருந்ததாகவும், அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement