மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் தன்மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல், தம்மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கு சார்பாக நடப்பதாக இலங்கையின் பிரபல துள்ளிசை கலைஞர் பிரியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
எனது சொந்த ஊர் மட்டக்களப்பு மண்டூர் பகுதியாகும். எனது தந்தை 2006ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து நான் இங்கிருந்து கொழும்புசென்றுவிட்டேன்.
அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற இசை நிகழ்வு ஒன்றுக்கு வருகைதந்தபோது இசை நிகழ்வு நடைபெற்று முடித்து எனது மாமாவினை பஸ்ஸில் ஏற்றிவிடுவதற்காக சென்றபோது மண்டூர் சந்தைக்கு பகுதியில் கடை வைத்துள்ளவர் என் மீது வாள்கொண்டு தாக்கினார்.
இவர் 2022ஆம் ஆண்டு என்னை குறித்த கடை உரிமையாளர் என்னையும் உனது தந்தையை கொன்றதுபோல் கொல்வேன் என்று கொலை அச்சுறுத்தல் விடுத்தார்.
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தேன். அதன்போது விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் என்னிடம் மன்னிப்கோரிய நிலையில் குறித்த விசாரணை முடிவுக்கு வந்தது.
நான் எதிர்பார்க்காத நிலையில் கடந்த மாதம் 24ஆம் திகதி இரவு 8.30மணியளவில் குறித்த கடை உரிமையாளர் என்னை 2022ஆம் ஆண்டு கொலைசெய்ய முயற்சித்தேன். தப்பிவிட்டாய் இன்று தப்பமாட்டாய் என்று கூறி எனது கழுத்தைப்பிடித்து என்மீது வாளினால் தாக்குதல் நடாத்தினார்.
இதுதொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல்இ தம்மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கு சார்பாக நடப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு சார்பாக நடக்கும் பொலிஸார். இலங்கையின் பிரபல துள்ளிசை கலைஞர் குற்றச்சாட்டு samugammedia மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் தன்மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல், தம்மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கு சார்பாக நடப்பதாக இலங்கையின் பிரபல துள்ளிசை கலைஞர் பிரியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.நேற்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.எனது சொந்த ஊர் மட்டக்களப்பு மண்டூர் பகுதியாகும். எனது தந்தை 2006ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து நான் இங்கிருந்து கொழும்புசென்றுவிட்டேன். அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற இசை நிகழ்வு ஒன்றுக்கு வருகைதந்தபோது இசை நிகழ்வு நடைபெற்று முடித்து எனது மாமாவினை பஸ்ஸில் ஏற்றிவிடுவதற்காக சென்றபோது மண்டூர் சந்தைக்கு பகுதியில் கடை வைத்துள்ளவர் என் மீது வாள்கொண்டு தாக்கினார்.இவர் 2022ஆம் ஆண்டு என்னை குறித்த கடை உரிமையாளர் என்னையும் உனது தந்தையை கொன்றதுபோல் கொல்வேன் என்று கொலை அச்சுறுத்தல் விடுத்தார். இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தேன். அதன்போது விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் என்னிடம் மன்னிப்கோரிய நிலையில் குறித்த விசாரணை முடிவுக்கு வந்தது.நான் எதிர்பார்க்காத நிலையில் கடந்த மாதம் 24ஆம் திகதி இரவு 8.30மணியளவில் குறித்த கடை உரிமையாளர் என்னை 2022ஆம் ஆண்டு கொலைசெய்ய முயற்சித்தேன். தப்பிவிட்டாய் இன்று தப்பமாட்டாய் என்று கூறி எனது கழுத்தைப்பிடித்து என்மீது வாளினால் தாக்குதல் நடாத்தினார்.இதுதொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல்இ தம்மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கு சார்பாக நடப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.