நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவ விடுமுறை எடுக்காமல் கடமைகளில் ஈடுபட்ட நாட்களுக்கான கொடுப்பனவை வழங்கக் கோரியே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இந்த தொழில்சார் நடவடிக்கையினால் அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாது என நீர் வழங்கல் தொழிற்சங்கங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.