முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திரு ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிவழங்க கோரியும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை வலியுறுத்தியும் அரசாங்கத்துக்கு தொடர் அழுத்தம் கொடுக்கும் நோக்கில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் யாழில் இன்றையதினம்(06) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட அலுவலகம் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் சட்டத்தரணிகள், பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.