சாலை விரிவாக்க பணியின் போது மிக பெரிய சிவலிங்கம் கிடைத்துள்ளமையால் மக்கள் களிப்பில் துள்ளி குதித்துள்ளனர்.
இச்சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள மருதாடு கிராமமருகே இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்ட பொழுது மிக பெரிய சிவலிங்கம் தோன்றியுள்ளது.
இதனால் ஆச்சரியமடைந்த மக்கள் பக்தி பெரு ஒழுங்குடன் அதனை பெக்கோ வாகனத்தின் உதவியுடன் மீட்டுள்ளனர்.
பின்னர் அதனை எடுத்து பிரதிஷ்டை பண்ணி அபிஷேகம் செய்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறாக சிவலிங்கம் தோன்றிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.