காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் பாரிய மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது.
நோர்வூட் நியூ வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று மீன்பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த மலைப்பாம்பு சிக்கியுள்ளது.
வலையினை எடுத்து சோதனையிட்டபோது அதில் சிக்கியிருந்த மலைப்பாம்பு உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக அந்த மீனவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மீனவர்களின் வலையில் மலைப்பாம்பு சிக்கியது இதுவே முதல் முறை.