சமுத்திராதேவி ரயிலின் இயந்திரம் இன்று காலை களுத்துறை வடக்கு பகுதியில் ரயில் பெட்டிகளில் இருந்து தளந்து தனியாக சென்றுள்ளதாக களுத்துறை ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
களுத்துறை வடக்கு, நாகசந்தி பகுதியில் ரயில் பெட்டிகளில் இருந்து இயந்திரம் தளர்ந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் தனித்து பயணித்துச் சென்று நின்றதாகக் கூறப்படுகிறது.
இயந்திரத்தை மீண்டும் எடுத்துச் சென்று முடுக்கிவிட்டு சுமார் 15 நிமிடங்கள் தாமதமாகி மீண்டும் மருதானை நோக்கி குறித்த ரயில் சென்றதாகக் கூறப்படுகிறது.