• May 28 2025

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் 1,062 பேர் பலி

Chithra / May 27th 2025, 1:50 pm
image


2025 ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 1,003 வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர். 

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார். 

இதனிடையே, 2,064 படுகாயங்களை ஏற்படுத்திய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும், 

இதில் சுமார் 7,000 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் 1,062 பேர் பலி 2025 ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 1,003 வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார். இதனிடையே, 2,064 படுகாயங்களை ஏற்படுத்திய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் சுமார் 7,000 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement