• Apr 27 2024

P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத் தலைவருக்கு அச்சுறுத்தல்...!samugammedia

Sharmi / Oct 28th 2023, 10:18 pm
image

Advertisement

'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை' மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத் தலைவர் சீலன் சிவயோகநாதன் வீட்டில் இல்லாத நேரத்தில் பொலிசார் என கூறிய இருவர் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று(28) காலை 11.15 மணியளவில் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வருவதாக கூறிய இருவர் நான் வீட்டில் இல்லாதபோது என்னைச் சந்திக்க வேண்டும் என எனது மனைவியிடம் கூறியுள்ளனர் என சீலன் சிவயோகநாதன் தெரிவித்தார்.

அதேவேளை ,  அதில் ஒருவர் பொலிசாருக்குரிய சீருடை அணிந்திருந்தார். மற்றைய நபர் சாதாரண உடையில் பொலிஸ் என பொறிக்கப்பட்டுள்ள தலைக்கவசம் அணிந்திருந்தார்.

இதுபோன்று பல தடவைகள் நான் வீட்டில் இல்லாதபோது மேற்படி பொலிஸ் நிலையத்தின் பெயரைச் சொல்லி வந்து செல்வது வழமையான ஒரு விடயமாக காணப்படுகிறது.

இச் செயற்பாடானது எனது குடும்பத்தாரை மனதளவில் மிகவும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் செயற்பாடாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத் தலைவருக்கு அச்சுறுத்தல்.samugammedia 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை' மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத் தலைவர் சீலன் சிவயோகநாதன் வீட்டில் இல்லாத நேரத்தில் பொலிசார் என கூறிய இருவர் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்து சென்றுள்ளனர்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்று(28) காலை 11.15 மணியளவில் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வருவதாக கூறிய இருவர் நான் வீட்டில் இல்லாதபோது என்னைச் சந்திக்க வேண்டும் என எனது மனைவியிடம் கூறியுள்ளனர் என சீலன் சிவயோகநாதன் தெரிவித்தார்.அதேவேளை ,  அதில் ஒருவர் பொலிசாருக்குரிய சீருடை அணிந்திருந்தார். மற்றைய நபர் சாதாரண உடையில் பொலிஸ் என பொறிக்கப்பட்டுள்ள தலைக்கவசம் அணிந்திருந்தார்.இதுபோன்று பல தடவைகள் நான் வீட்டில் இல்லாதபோது மேற்படி பொலிஸ் நிலையத்தின் பெயரைச் சொல்லி வந்து செல்வது வழமையான ஒரு விடயமாக காணப்படுகிறது.இச் செயற்பாடானது எனது குடும்பத்தாரை மனதளவில் மிகவும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் செயற்பாடாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement