கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் மாகாண பிரதம
செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து உலக உணவுத் திட்டத்தின்
இலங்கைக்கான தலைவர் .சித்திக் மற்றும் அவருடைய அதிகாரிகளுக்குமிடையே
கலந்துரையாடல் கடந்த 27ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது..
கிழக்கு
மாகாணத்தில் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று வேளை
உணவு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது குறித்தும்,
இலங்கையிலேயே
கிழக்கு மாகாணத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட
குடும்பங்கள் அதிகமாக காணப்படுவதால், அவர்களுக்காக புதிய வேலைத்திட்டம்
அறிமுகப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது உலக உணவு திட்டத்தின் நிர்வாகிகள் தாங்களால் முடிந்த முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர்.
இதில் ஆளுனரின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று வேளை உணவு. உலக உணவுத் திட்ட பிரதிநிதிகளுடன் கிழக்கு ஆளுனர் கலந்துரையாடல்.samugammedia கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் மாகாண பிரதம
செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து உலக உணவுத் திட்டத்தின்
இலங்கைக்கான தலைவர் .சித்திக் மற்றும் அவருடைய அதிகாரிகளுக்குமிடையே
கலந்துரையாடல் கடந்த 27ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.கிழக்கு
மாகாணத்தில் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று வேளை
உணவு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது குறித்தும்,
இலங்கையிலேயே கிழக்கு மாகாணத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட
குடும்பங்கள் அதிகமாக காணப்படுவதால், அவர்களுக்காக புதிய வேலைத்திட்டம்
அறிமுகப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.இதன் போது உலக உணவு திட்டத்தின் நிர்வாகிகள் தாங்களால் முடிந்த முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர்.இதில் ஆளுனரின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.