நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, வடக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.