• May 19 2024

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி! samugammedia

Tamil nila / Sep 11th 2023, 8:15 pm
image

Advertisement

கேகாலை - அவிசாவளை பிரதான வீதியில் கன்னந்தொட்ட பகுதியில் இன்று மாலை பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.


வவுனியாவில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் எம்பிலிப்பிட்டியில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் நால்வர் படுகாயங்களுடனும் 11 பேர் சிறுகாயங்களுடனும் கரவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வவுனியாவில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி புறப்பட்ட பஸ் லொறியொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர்.

விபத்து தொடர்பாக ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி samugammedia கேகாலை - அவிசாவளை பிரதான வீதியில் கன்னந்தொட்ட பகுதியில் இன்று மாலை பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.வவுனியாவில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் எம்பிலிப்பிட்டியில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.விபத்தில் நால்வர் படுகாயங்களுடனும் 11 பேர் சிறுகாயங்களுடனும் கரவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியாவில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி புறப்பட்ட பஸ் லொறியொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர்.விபத்து தொடர்பாக ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement