• May 06 2024

ஆத்திரத்தில் ஒன்றரை வயது குழந்தையை மாடியிலிருந்து வீசிக்கொன்ற தந்தை..! samugammedia

Tamil nila / Sep 11th 2023, 8:29 pm
image

Advertisement

இந்தியாவின் மகாராஷ்டிராவில் சண்டையால் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் மாடியில் இருந்து 1½ வயது குழந்தையை வீசி கொன்ற தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.

தானே மாவட்டம் தைகர்காவ் அபய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அல்டாப் முகமது. இவர் தனது மனைவி மற்றும் 1½ வயது மகளுடன் வசித்து வந்தார். அல்டாப் முகமதுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.இதனால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி மாலை 6 மணி அளவில் வேலை முடிந்து அல்டாப் முகமது மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இது தொடர்பாக மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரம் அடைந்த அல்டாப் முகமது மனைவியை அடித்து உதைத்துள்ளார்.இருப்பினும் கோபம் அடங்காத அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 1½ வயது மகளைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்து பெற்றக் குழந்தை என்றும் பாராமல் கீழே வீசினார். இதில் படுகாயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இது பற்றி அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து அல்டாப் முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆத்திரத்தில் ஒன்றரை வயது குழந்தையை மாடியிலிருந்து வீசிக்கொன்ற தந்தை. samugammedia இந்தியாவின் மகாராஷ்டிராவில் சண்டையால் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் மாடியில் இருந்து 1½ வயது குழந்தையை வீசி கொன்ற தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.தானே மாவட்டம் தைகர்காவ் அபய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அல்டாப் முகமது. இவர் தனது மனைவி மற்றும் 1½ வயது மகளுடன் வசித்து வந்தார். அல்டாப் முகமதுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.இதனால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி மாலை 6 மணி அளவில் வேலை முடிந்து அல்டாப் முகமது மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.இது தொடர்பாக மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரம் அடைந்த அல்டாப் முகமது மனைவியை அடித்து உதைத்துள்ளார்.இருப்பினும் கோபம் அடங்காத அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 1½ வயது மகளைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்து பெற்றக் குழந்தை என்றும் பாராமல் கீழே வீசினார். இதில் படுகாயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.இது பற்றி அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து அல்டாப் முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement