கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பேருந்தும் ஹட்டன் நகரில் இருந்து கண்டி நோக்கி சென்ற அரச பேருந்தும் தியகல கினிகத்தேன பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் படுகாயம் அடைந்துள்ளன.
சம்பவம் நடந்த இடத்திற்கு கினிக்கத்தேன பொலிசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த பயணிகள் கினிக்கத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளையும் வீதி தடை அகற்ற பொலிசார் மேற்கொண்டு வருவதாக கினிக்கத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.