புதிய அரசியலமைப்பு மற்றும் புதியவர்களை அரசியலுக்கு கொண்டு வரும் ஐக்கிய தேசிய கட்சி எதிர்காலத்தில் புதிய பயணத்தை ஆரம்பிக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்க அதிகாரிகளின் சரியான தீர்மானங்களை உடனடியாக அமுல்படுத்துவதே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்த தருணத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கை.
அரசாங்க உத்தியோகத்தர்களால் உடனடியாக முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.