இலங்கையானது கடினமான, தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இதனை சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சித் துறையின் சிரேஷ்ட அதிகாரி டேனியல் லீ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இலங்கையில் அதன் பொருளாதார மீட்பு முழுமையாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஆகவே, முழுமையான மீட்சியை நோக்கிச் செயற்படுவதற்கு இலங்கை தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.