நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படவுள்ள இலங்கை தேசத்தின் இரண்டாவது சுதந்திர நாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புப் தெரிவித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் வவுனியா மாவட்டம் ஜெனிற்றாவிற்கு, நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொலிசாரினால் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், வேலன்சுவாமிகள் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.