• May 19 2024

சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி திருமலையில் கவனயீர்ப்பு போராட்டம்..!samugammedia

Sharmi / Jul 31st 2023, 11:46 am
image

Advertisement

அரசியல் தீர்விற்கான 100 நாட்கள் செயல் முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி திருகோணமலை -மகேசர் மைதானத்திற்கு முன்னால் இன்று (31) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அதிகார பகிர்வு எமக்கு வேண்டும், சமஷ்டி அதிகார பகிர்வை உறுதிசெய் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி திருமலையில் கவனயீர்ப்பு போராட்டம்.samugammedia அரசியல் தீர்விற்கான 100 நாட்கள் செயல் முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி திருகோணமலை -மகேசர் மைதானத்திற்கு முன்னால் இன்று (31) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அதிகார பகிர்வு எமக்கு வேண்டும், சமஷ்டி அதிகார பகிர்வை உறுதிசெய் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement