வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது என்பதால் தயாரிப்பு நிறுவனம் பல விதமான ப்ரோமோஷன்களை செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வாரிசு பட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
அதன் புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.
ரயிலுக்கு வெளியில் ஒட்டப்பட்டு இருந்த வாரிசு போஸ்டர் தற்போது மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டு இருக்கிறது.
கிழிந்த ஸ்டிக்கருடன் இருக்கும் ரயில் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதை பார்த்து விஜய் ரசிகர்கள் கொந்தளித்து இருக்கிறார்கள்.