இந்தியாவில் விவாகரத்து கேட்டு மனைவி நீதிமன்றுக்கு சென்றதால் கணவனால் வெட்டி கடுங்காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரேவில் கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு வந்த பெண்ணொருவர் கணவரைப் பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்று விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் மனு தொடர்பாக, நேற்றுமுன்தினம்(22) திகதி விசாரணை நடைபெறவிருந்த நிலையில், இருவரும் நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளனர்.
தன் விருப்பத்துக்கு மாறாக,விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்குச் சென்ற மனைவியைக் கண்ட, கணவர் வீதியோர இளநீர் விற்பவரின் கையிலிருந்த அரிவாளைப் பிடுங்கி, மனைவி மீது தாக்குதலை மேற்கொண்டார்.
இதைக் கண்ட அப்பகுதியினர் குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதோடு, தாக்குதலுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விவாகரத்து கேட்ட மனைவி. அரிவாளை எடுத்த கணவன்.samugammedia இந்தியாவில் விவாகரத்து கேட்டு மனைவி நீதிமன்றுக்கு சென்றதால் கணவனால் வெட்டி கடுங்காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.இந்தியாவின் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரேவில் கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு வந்த பெண்ணொருவர் கணவரைப் பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்று விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் மனு தொடர்பாக, நேற்றுமுன்தினம்(22) திகதி விசாரணை நடைபெறவிருந்த நிலையில், இருவரும் நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளனர்.தன் விருப்பத்துக்கு மாறாக,விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்குச் சென்ற மனைவியைக் கண்ட, கணவர் வீதியோர இளநீர் விற்பவரின் கையிலிருந்த அரிவாளைப் பிடுங்கி, மனைவி மீது தாக்குதலை மேற்கொண்டார்.இதைக் கண்ட அப்பகுதியினர் குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதோடு, தாக்குதலுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.