• May 10 2024

கல்முனையில் தாயின் பெயரால் அமைக்கப்பட்ட ஓய்வு நிழல் குடை உத்தியோகபூர்வமாக கையளிப்பு...! samugammedia

Sharmi / Nov 10th 2023, 8:28 pm
image

Advertisement

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட  அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்களின் பெற்றோரினால்  அமைக்கப்பட்ட  கல்லாசனங்களுடன் கூடிய ஓய்வு நிழல் குடை  உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரினால்   அமைக்கப்பட்ட குறித்த  ஓய்வு நிழல் குடை வழங்கும்  நிகழ்வு இன்று (10)  பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தலைமையில்  இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் முதலில் அதிதிகள்  மாலை அணிவிக்கப்பட்டு  அழைத்து வரப்பட்டு மாணவர்களுக்கான கல்லாசனங்களுடன்  அமைக்கப்பட்ட  ஓய்வு நிழல் குடை  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. 

பின்னர் தொடராக  இடம்பெற்ற  நிகழ்வில் முதலில் கிராஅத் ஓதப்பட்டு வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

குறித்த வரவேற்புரையினை தலைமையுரையை பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் நிகழ்த்தினார்.

இதன் போது பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தனது கருத்தில்,

எமது பாடசாலையின் தேவைகளின் ஒன்றாக இருக்கின்ற மாணவர்களின் ஓய்வு நேரங்கள் மற்றும் பாடசாலை நிறைவடையும் நேரங்கள், பாடசாலை இடைவேளை நேரங்கள் மற்றும் எமது பாடசாலைக்கு வருகை தருகின்ற பெற்றோர்கள் இருப்பதற்கும் இந்த இருக்கையுடன் கூடிய நிழற்குடையை  இங்கு கல்வி கற்கின்ற மாணவி ஒருவரின் தந்தையான மௌலவி ஒருவர் மரணித்த  தனது தாயின் பெயருடன்  ஞாபகார்த்தமாக அன்பளிப்பு செய்திருக்கின்றார்.இவ்வாறான  செயற்பாடுகள் ஏனையோருக்கு சிறந்த எடுத்து காட்டாகும் என்றார்.

இன்றைய நிகழ்வில்  அதிதியாக கலந்து சிறப்பித்த  மௌலவி எஸ்.எம் நிம்ஸாத்  பெற்றோரின் நன்மதிப்பும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் தொடர்பில் சிறப்பாக உரையாற்றினார்.

இந்நிகழ்வில் அதிதியாக மௌலவி எஸ்.எம் நிம்ஸாத்  பாடசாலை பிரதி அதிபர் ஏ.எஸ். சலாம்    உதவி அதிபர் திருமதி இ.றினோஸ் ஹஜ்மீன் யு.எல். ஹிதாயா   பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எம். ஜிப்ரி  பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர்  பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்    நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும் கல்முனையைச் சேர்ந்த மர்ஹூம் சுபைதா அவர்களின் நினைவாக அவர்களின் மகன் மௌலவி எஸ்.எம் நிம்ஸாத் மற்றும் அவரது பாரியார் எஸ்.எச். மிஹ்றூன் நிஷா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கல்லாசனங்களுடன்  ஓய்வு நிழல் குடை அமைக்கப்பட்டிருந்ததுடன் இன்றைய நிகழ்வில்  அதிதியாக கலந்து சிறப்பித்த  மௌலவி எஸ்.எம் நிம்ஸாத்   பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச்சின்னமும்  வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




கல்முனையில் தாயின் பெயரால் அமைக்கப்பட்ட ஓய்வு நிழல் குடை உத்தியோகபூர்வமாக கையளிப்பு. samugammedia அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட  அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்களின் பெற்றோரினால்  அமைக்கப்பட்ட  கல்லாசனங்களுடன் கூடிய ஓய்வு நிழல் குடை  உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.பெற்றோரினால்   அமைக்கப்பட்ட குறித்த  ஓய்வு நிழல் குடை வழங்கும்  நிகழ்வு இன்று (10)  பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தலைமையில்  இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் முதலில் அதிதிகள்  மாலை அணிவிக்கப்பட்டு  அழைத்து வரப்பட்டு மாணவர்களுக்கான கல்லாசனங்களுடன்  அமைக்கப்பட்ட  ஓய்வு நிழல் குடை  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. பின்னர் தொடராக  இடம்பெற்ற  நிகழ்வில் முதலில் கிராஅத் ஓதப்பட்டு வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.குறித்த வரவேற்புரையினை தலைமையுரையை பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் நிகழ்த்தினார்.இதன் போது பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தனது கருத்தில்,எமது பாடசாலையின் தேவைகளின் ஒன்றாக இருக்கின்ற மாணவர்களின் ஓய்வு நேரங்கள் மற்றும் பாடசாலை நிறைவடையும் நேரங்கள், பாடசாலை இடைவேளை நேரங்கள் மற்றும் எமது பாடசாலைக்கு வருகை தருகின்ற பெற்றோர்கள் இருப்பதற்கும் இந்த இருக்கையுடன் கூடிய நிழற்குடையை  இங்கு கல்வி கற்கின்ற மாணவி ஒருவரின் தந்தையான மௌலவி ஒருவர் மரணித்த  தனது தாயின் பெயருடன்  ஞாபகார்த்தமாக அன்பளிப்பு செய்திருக்கின்றார்.இவ்வாறான  செயற்பாடுகள் ஏனையோருக்கு சிறந்த எடுத்து காட்டாகும் என்றார்.இன்றைய நிகழ்வில்  அதிதியாக கலந்து சிறப்பித்த  மௌலவி எஸ்.எம் நிம்ஸாத்  பெற்றோரின் நன்மதிப்பும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் தொடர்பில் சிறப்பாக உரையாற்றினார்.இந்நிகழ்வில் அதிதியாக மௌலவி எஸ்.எம் நிம்ஸாத்  பாடசாலை பிரதி அதிபர் ஏ.எஸ். சலாம்    உதவி அதிபர் திருமதி இ.றினோஸ் ஹஜ்மீன் யு.எல். ஹிதாயா   பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எம். ஜிப்ரி  பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர்  பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்    நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.மேலும் கல்முனையைச் சேர்ந்த மர்ஹூம் சுபைதா அவர்களின் நினைவாக அவர்களின் மகன் மௌலவி எஸ்.எம் நிம்ஸாத் மற்றும் அவரது பாரியார் எஸ்.எச். மிஹ்றூன் நிஷா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கல்லாசனங்களுடன்  ஓய்வு நிழல் குடை அமைக்கப்பட்டிருந்ததுடன் இன்றைய நிகழ்வில்  அதிதியாக கலந்து சிறப்பித்த  மௌலவி எஸ்.எம் நிம்ஸாத்   பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச்சின்னமும்  வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement