இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எட்டப்படவுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இறுதி கட்டணத்தை அறிவிக்க உள்ளது.
கட்டண திருத்தங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று விசேட அமர்வொன்றை நடத்தியது.
இதன்படி, பொது மக்கள் கருத்துக்கள் மற்றும் இலங்கை மின்சார சபை முன்வைக்கும் சூத்திரங்களை கருத்தில் கொண்டு, இறுதி முடிவை அறிவிக்கும்.
ஜூலை முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 3.15 வீதத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்மொழியப்பட்ட மின் கட்டணங்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா வெளியான தகவல் samugammedia இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எட்டப்படவுள்ளது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இறுதி கட்டணத்தை அறிவிக்க உள்ளது.கட்டண திருத்தங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று விசேட அமர்வொன்றை நடத்தியது.இதன்படி, பொது மக்கள் கருத்துக்கள் மற்றும் இலங்கை மின்சார சபை முன்வைக்கும் சூத்திரங்களை கருத்தில் கொண்டு, இறுதி முடிவை அறிவிக்கும்.ஜூலை முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 3.15 வீதத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.