அமெரிக்காவில் ஓரிகான் ரயில் நிலையத்தில் மூன்று வயது சிறுமியை ரயில் பாதையில் தள்ளிவிட்ட 32 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் பிளாட்பார்மில் தனது அம்மாவுடன் நின்று கொண்டு இருந்த மூன்று வயது சிறுமியை பெண் ஒருவர் திடீரென ரயில் பாதையில் தள்ளிவிட்ட அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் அனைவரையும் திகிலடைய வைத்துள்ளது.
அந்த வீடியோவில் சிறுமியின் பின்னால் அமர்ந்திருந்த பெண் திடீரென எழுந்து நின்று கீழே உள்ள தண்டவாளத்தில் 3 வயது சிறுமியை தள்ளிவிடுவது பதிவாகியுள்ளது, அத்துடன் இதனை கண்ட சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததும் பதிவாகியுள்ளது.