• May 18 2024

ரோட்டில் நின்ற பைக்கிலிருந்து பெட்ரோலை திருடி அதே பைக்கிற்கு தீ வைத்த பெண்! samugammedia

Tamil nila / May 12th 2023, 3:06 pm
image

Advertisement

டெல்லியில் பெண் ஒருவர் பைக்கில் இருந்து பெட்ரோலை வெளியேடுத்து, அந்த வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டெல்லியின் தென்கிழக்கு மாவட்டமான ஜெய்த்பூரில், பெண் ஒருவர் ரோடுடில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஒன்றில் இருந்து பெட்ரோலை வெளியே எடுத்து, அதே வாகனத்தை தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பெண் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு வாகனத்தை தீயிட்டு கொளுத்த முற்பட்ட போது அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக வெளியான CCTV காட்சிகளில், அந்த பெண் ஜெய்த்பூரில் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது தனது பார்வையை செலுத்தி நிற்கிறார். சுற்றியுள்ள பகுதிகளை நன்கு ஆராய்ந்த பிறகு, அங்கு நின்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை வெளியே எடுத்து, தீப்பெட்டி கொண்டு வாகனத்திற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து விலகி செல்கிறார்.

சம்பந்தப்பட்ட பெண் மற்றொரு வாகனத்திற்கு தீ வைக்க முயற்சிக்கும் போது, உள்ளூர் மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் அந்த பெண் எதற்காக இத்தகைய சம்பவத்தை செய்தார் என்பது குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

ரோட்டில் நின்ற பைக்கிலிருந்து பெட்ரோலை திருடி அதே பைக்கிற்கு தீ வைத்த பெண் samugammedia டெல்லியில் பெண் ஒருவர் பைக்கில் இருந்து பெட்ரோலை வெளியேடுத்து, அந்த வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.டெல்லியின் தென்கிழக்கு மாவட்டமான ஜெய்த்பூரில், பெண் ஒருவர் ரோடுடில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஒன்றில் இருந்து பெட்ரோலை வெளியே எடுத்து, அதே வாகனத்தை தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பெண் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு வாகனத்தை தீயிட்டு கொளுத்த முற்பட்ட போது அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இது தொடர்பாக வெளியான CCTV காட்சிகளில், அந்த பெண் ஜெய்த்பூரில் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது தனது பார்வையை செலுத்தி நிற்கிறார். சுற்றியுள்ள பகுதிகளை நன்கு ஆராய்ந்த பிறகு, அங்கு நின்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை வெளியே எடுத்து, தீப்பெட்டி கொண்டு வாகனத்திற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து விலகி செல்கிறார்.சம்பந்தப்பட்ட பெண் மற்றொரு வாகனத்திற்கு தீ வைக்க முயற்சிக்கும் போது, உள்ளூர் மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் அந்த பெண் எதற்காக இத்தகைய சம்பவத்தை செய்தார் என்பது குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

Advertisement